16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட விதிகளை மீறி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் சட்டமூலம் முன்மொழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரையிலான அபராதத்தை விதிக்க முடியும் என முன்மொழியப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




