தடைசெய்யப்பட்ட பாக்கு கலவையான ‘பான் மசாலா’வுடன் தொடர்புடைய வர்த்தக நாமத்தை மறைமுகமாக விளம்பரப்படுத்தும் விளம்பரங்களில் தோன்றுவதை உடனடியாக நிறுத்துமாறு பொலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிர மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று நடிகர்களும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடிகர்கள் ‘Vimal’ இலவங்கப் பொருள் தயாரிப்பை விளம்பரப்படுத்தியிருந்தாலும், அந்த வர்த்தக நாமம் பான் மசாலாவுடன் நேரடியாக தொடர்புடையதாக இருப்பதால், இது ‘Surrogate Advertising’ எனப்படும் மறைமுக விளம்பரமாகக் கருதப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட பொருளை நேரடியாக விளம்பரப்படுத்த முடியாத நிலையில், அதே வர்த்தக நாமம், இலச்சினை அல்லது அடையாளத்தைக் கொண்ட சட்டபூர்வமான வேறு பொருளை விளம்பரப்படுத்துவது மறைமுக விளம்பர உத்தியாகும்.
சம்பந்தப்பட்ட விளம்பரங்களை தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து நீக்குமாறும், அவற்றை எதிர்காலத்தில் ஒளிபரப்புவதற்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும், தயாரிப்பு நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் அதிகாரிகள் நடிகர்களிடம் கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோரின் பிரதிநிதிகளோ அல்லது ‘Vimal’ வர்த்தக நாமத்தின் உரிமையாளரான Vishnu & Company Trademarks நிறுவனமோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட விளம்பரம் YouTube தளத்தில் 106 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




