இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்ட 7 சிறுவர்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் உணவு நச்சுத்தன்மைக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு கடுமையான வயிற்று மற்றும் மார்பு வலி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில், பிறந்தநாள் கேக்கிற்குள் இறந்த பல்லியின் உடல் ஒன்று காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேக்கை தயாரித்த பேக்கரியின் சுகாதாரத் தரம் மற்றும் உற்பத்தி நடைமுறை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




