முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார முன்வைத்த பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




