முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
வணிகம்

போலி நிறுவனங்கள் மூலம் 715 மில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு!

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் 105 போலி நிறுவனங்கள் ஊடாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 2023 ஜனவரிக…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
போலி நிறுவனங்கள் மூலம் 715 மில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு!

2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் 105 போலி நிறுவனங்கள் ஊடாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 2023 ஜனவரிக்கு முன்னர் இடம்பெற்ற இவ்வாறான போலி இறக்குமதி ஆவணங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

டுபாயை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய சர்வதேச பணச் சலவை வலையமைப்புகளுக்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் 55 பேரையும், 227 வங்கிக் கணக்குகளையும், வங்கிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுமார் 24,300 தொலைநகல் பணப் பரிமாற்றங்களையும் (Telegraphic Transfers) CID இதுவரை அடையாளம் கண்டுள்ளது.

வர்த்தக வங்கிகள், இலங்கை சுங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு இடையில் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் மற்றும் உண்மையான பொருள் இறக்குமதிகள் தொடர்பான தகவல்களை ஒப்பிடும்போது பாரிய குறைபாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு செலாவணி விகிதம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அதிக கேள்வி காணப்பட்ட போதிலும், அந்தப் பொருட்கள் நாட்டிற்கு வந்திருக்கவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகளின்போது பாரிய நிதி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாகவும் பிரதி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ‘Sunday Times’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான மோசடிகள் சுங்கம் போன்ற நிறுவனங்களிடம் சிக்கியபோது, வர்த்தகர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இம்முறை இடம்பெறும் விசாரணைகளில் பணம் அனுப்பப்பட்ட போலி நிறுவனங்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, எஃகு சார்ந்த வீட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவும் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அது தொடர்பான வழக்கு ஒன்று மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, நீதிமன்ற உத்தரவின்றி 14 நாட்களுக்கு இரண்டாம் நிலை சொத்துக்களை முடக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பணச் சலவை தடுப்புச் சட்டம் மற்றும் நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டம் ஆகியவற்றில் கடுமையான திருத்தங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்