முழங்காவில் பகுதியில் உள்ள வங்கியொன்றில் பணத்தை வைப்பிலிடுவதற்காக வந்த இருவர் போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி நண்பகல், முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் பணத்தை வைப்பிலிடுவதற்காக வந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரையும் முழங்காவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 61 வயதுடைய புனகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் 2026 ஆகஸ்ட் 9ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




