வெள்ளை மாளிகையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த சுமார் 400 மில்லியன் டொலர் செலவிலான ‘பால் ரூம்’ மண்டபத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு அமெரிக்க மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் குழு, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையின் தற்காலிக குடியிருப்பாளரே தவிர அதன் உரிமையாளர் அல்ல என வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் இந்த பால் ரூம் மண்டபத்தை அமைக்க திட்டமிட்டிருந்தது.
இந்த மண்டபம் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகவும், அதன் மதிப்பிடப்பட்ட நிர்மாணச் செலவு சுமார் 400 மில்லியன் டொலர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில் திருப்தியில்லையெனில், அதற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




