இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.




