ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகற்றும் பணிகளை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




