இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவியின் மற்றொரு கட்டமாக, 250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுடைய பெய்லி பாலங்களின் தொகுதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதன்படி, ‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்தியாவின் மீள்கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பொதியின் ஒரு பகுதியாக இந்தப் பாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் இந்தப் பெய்லி பாலங்களை இந்திய இராணுவப் பொறியியலாளர்கள் நிறுவவுள்ளனர்.
இதன் மூலம் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்கும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




