முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உள்ளூர்

ரயிலில் தண்ணீர் அதிக விலையில் விற்ற நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை பயணித்த ரயிலின் உணவகத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் பாட்டில்களை விற்ற நிறுவனத்திற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நுக…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
ரயிலில் தண்ணீர் அதிக விலையில் விற்ற நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை பயணித்த ரயிலின் உணவகத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் பாட்டில்களை விற்ற நிறுவனத்திற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுராதபுர மாவட்ட விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில், ரூ.120 அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட 1000 மில்லிலிட்டர் குடிநீர் பாட்டில் ஒன்று ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 96ஆம் இலக்க உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதிகபட்ச சில்லறை விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களைப் பற்றி 1977 என்ற குறுந்தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் வழங்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்