அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2026 ஜூலை 23 ஆம் திகதி மாலை ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷெனன் பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33, 36 மற்றும் 37 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




