15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, வரும் செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியாது. மேலும், 2027 ஜனவரி முதல் ஏற்கனவே உள்ள சமூக ஊடகக் கணக்குகளுக்கும் இந்தத் தடை அமல்படுத்தப்படவுள்ளது.




