நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரதொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் ஹோமாகம பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஜூலை 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் கொலைக்கு உதவி செய்த மற்றொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 2026 ஜூலை 19 ஆம் திகதி மாலை பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியிலும், நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரம்முல்ல பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 29 வயதுடைய ரணால மற்றும் பள்ளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.




