இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை செல்லுபடியாகாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.




