மத்திய மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கண்டி நகரின் நான்கு முக்கிய உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்ய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து நகர இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் கெட்டம்பே மேம்பாலம், மகையாவ சுரங்கப்பாதை, வில்லியம் கோபலாவ மாவத்தை விரிவாக்கம் மற்றும் லூயிஸ் பீரிஸ் மாவத்தை அபிவிருத்தி ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வும் களப் பரிசோதனையும் 2026 ஜூலை 15ஆம் தேதி அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டங்களை நிறைவு செய்து அதன் பயன்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.




