எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி மாணவர்கள் குழுவொன்று தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 23ஆம் திகதி வெளியிடப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) அறிவித்துள்ளது.
இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் சட்டமா அதிபர் தரப்பும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.




