முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.




