முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உள்ளூர்

A9 வீதி விபத்தில் இருவர் பலி

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி காலை A9 வீதியில் 217 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கெப் வண்…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
A9 வீதி விபத்தில் இருவர் பலி

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி காலை A9 வீதியில் 217 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கெப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி மற்றும் உதவியாளர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 22 வயதுடைய வெல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்