மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவன் மாத்தறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
2026.08.24 அன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் சிறுவனை மீட்டு, அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




