2026.08.22 அன்று மாலை, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்–கிளிநொச்சி வீதியில் 271ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடந்து சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 18 வயதுடைய பளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




