நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்கவும், போதைப்பொருட்களுக்கான கேள்வியைக் குறைக்கவும், நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்தவும் “நாடே ஒன்றாக” தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தேசிய நடவடிக்கை 2025.10.30 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை பொலிஸாரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் 2026.08.18 ஆம் திகதிக்கான தினசரி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




