2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மதியம் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கலமுல்ல–இமதூவ வீதியின் வாடியவத்த பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம நோக்கிப் பயணித்த பேருந்தில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்த பெண், இமதூவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இமதூவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணாவார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




