தேசிய வீடமைப்பு அதிகார சபையின் (NHDA) பொது முகாமையாளர் சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
NHDA தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத் வெளியிட்டுள்ள எழுத்துமூல அறிவிப்பின்படி, கட்டாய விடுமுறைக் காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் எந்தவொரு அலுவலகத்திற்கோ அல்லது பணியிடத்திற்கோ பொது முகாமையாளர் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைவரின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல வேண்டாம் எனவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவன விதிமுறைகள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாகக் கூறப்படும் பல பாரதூரமான முறைகேடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என NHDA தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.




