கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 16ஆம் திகதி மாலை மருதானை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் இருந்து சுற்றுப்புறத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் திறந்திருந்த பகுதியொன்றில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




