பாடசாலை கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர் இடமாற்ற நடைமுறையை முறையாகச் செயற்படுத்துதல் மற்றும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.




