மத்திய கிழக்கில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் குவைத் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, இரு நகரங்களுக்கும் இடையில் வாரத்திற்கு ஆறு விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு புதன்கிழமையும் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 5.10 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் விமானம், இரவு 8.05 மணியளவில் குவைத்தை சென்றடையும்.
மறுமார்க்க விமானங்கள் அதே நாட்களில் இரவு 9.10 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பை வந்தடையும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.




