வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை மற்றும் மாரவில பொலிஸார் மேற்கொண்ட தனித்தனி சோதனைகளில் சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆகஸ்ட் 6 ஆம் திகதி மாலை பின்வத்த பொலிஸ் பிரிவின் பரடைஸ் வத்த பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை நடத்திய சோதனையில் 75 லிட்டர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானங்களுடன் 43 வயதுடைய வாத்துவை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு பின்வத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதே நாள் காலை மாரவில பொலிஸார் நாத்தாண்டிய பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 75 லிட்டர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானங்களும், கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 1,215 லிட்டர் கோடாவும் (6 பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டன. சம்பவத்தில் 30 வயதுடைய கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்த மற்றும் மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




