வெளகெதர பொலிஸ் பிரிவின் அம்பகொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பகொடை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.
குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை மேற்கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெளகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




