நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் திடீர் வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலைமைகள் சீரடைந்த பின்னர் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும்.




