நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் அறிவிக்கும் வரை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிலவும் வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




