சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ மற்றும் கனேதென்ன பகுதிகளுக்கு இடையிலான வீதி பகுதி மூடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வீதியில் மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், வாகன சாரதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அறிவிக்கும் வரை குறித்த வீதி பகுதியை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




