கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி பகுதியில் 2026.08.18 அன்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வரி செலுத்தாமல் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 12,000 சிகரெட்டுகளுடன் இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 34 வயதுடைய சீனப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




