மினுவாங்கொட கொட்டுகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 1,070 லீற்றர் கோடாவுடன் 58 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி நண்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில், மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று கொட்டுகொட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எகொடவத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 1,070 லீற்றர் கோடா ஆறு பீப்பாய்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




