முக்கியச் செய்தி
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குளவி தாக்குதல்ஆசிரியர்களுக்கு கட்டாய பதிவு மற்றும் தொழில் உரிமம்13 ஆண்டுகள் தவறான நபர் மீது கொள்ளை வழக்குஅதிக சத்தத்திற்கு இனி சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கைதுபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குளவி தாக்குதல்ஆசிரியர்களுக்கு கட்டாய பதிவு மற்றும் தொழில் உரிமம்13 ஆண்டுகள் தவறான நபர் மீது கொள்ளை வழக்குஅதிக சத்தத்திற்கு இனி சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கைதுபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

13 ஆண்டுகள் தவறான நபர் மீது கொள்ளை வழக்கு

அடையாளக் குழப்பத்தால் 13 ஆண்டுகளாக கொள்ளை வழக்கில் தவறாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நபர் தொடர்பான தகவல் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2013ஆம் ஆண்டு மஹமுகலனா…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
13 ஆண்டுகள் தவறான நபர் மீது கொள்ளை வழக்கு

அடையாளக் குழப்பத்தால் 13 ஆண்டுகளாக கொள்ளை வழக்கில் தவறாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நபர் தொடர்பான தகவல் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2013ஆம் ஆண்டு மஹமுகலனாய பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரசாத் குமார என்பவரே உண்மையான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டிருந்தார். எனினும், அவருக்குப் பதிலாக அவரது மூத்த சகோதரரான பிரியந்த குமார என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும், தாமும் இந்த வழக்கில் சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கருதிய பிரியந்த குமார, கடந்த பல ஆண்டுகளாக குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் ஆஜராகி வந்துள்ளார்.

இந்த தவறு வெளிச்சத்துக்கு வந்தது, பிரியந்த குமார நீதிமன்றத்தில் ஆஜராகாத ஒரு நாளில் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரேயாகும்.

இதன்போது, பிணையாளராக செயற்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில், தான் பிணை வழங்கியது குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் இளைய சகோதரரான பிரசாத் குமார என்பவருக்கே எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை சரியாக அடையாளம் காண விசாரணை நடத்துமாறு அரச சட்டத்தரணி ஷஷிகலா குமாரி ஹேவாகே, மேல் நீதிமன்ற நீதிபதி டிக்கிரி கே. ஜயதிலகவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதியின் அனுமதியுடன் அரச சட்டத்தரணி, பிணையாளர்களில் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது, தாம் பிணை வழங்கியது தனது தந்தையான பிரசாத் குமார என்பவருக்கே என்றும், அவருக்கு ஒரு கால் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தவர் தனது தந்தையின் சகோதரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தந்தைக்கு நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வழங்கப்படாததால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றும், அழைப்பாணை கிடைக்கும் வரை வீட்டிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அடையாளக் குழப்பத்தின் காரணமாக தவறாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரியந்த குமாரவை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும், வழக்கின் உண்மையான சந்தேகநபரான பிரசாத் குமாரவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அவரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்